கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா திமுக அரசு 40 நாட்களாக குறைத்தும், ஆறு மாதமாக சரியான முறையில் ஊதியம் வழங்காமலும்,பொய் கூறி மக்களை ஏமாற்றி வேலை செய்ய வைப்பதாக எழுந்த புகாரின் பேரில்
இன்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் செறுகோல் ஊராட்சிக்கு நேரில் சென்று
100 நாள் வேலை திட்டத்தை கழக நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவித்த போல்,150 நாளாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும், மேலும்
மத்திய அரசு கூறிய 125 நாள் வேலை திட்டத்தை வழங்காமல் இழுத்தடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு வருகிற 13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்
13/02/2026 அன்று திருவட்டார்,தக்கலை,மேல்புறம்,முஞ்சிறை,கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்,
மேலும் அப்பகுதி மக்களுக்கு எடப்பாடியார் அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டினார்
மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் எடப்பாடியார் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிவர்த்தி செய்து தங்கள் பகுதிகளுக்கும் தங்களுக்கும் கிடைக்க உறுதி அளித்தார்.இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள்.நிமால், ஜெயதாஸ்,எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் சக்கீர் உசேன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூ ஜின் திருவட்டார் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பீனா குமாரி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

















