திமுக அரசை கண்டித்து திருவள்ளூரில் பாஜகவின் மகளிர் அணியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் பாஜகவின் மகளிரணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும், அவற்றை தடுக்க திமுக அரசு தவறியதாகவும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதாகவும், திமுக அரசு கொள்கையற்ற அரசு எனவும், இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் கூறி திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

















