அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி, 2025-ல் மாநாடு நடத்தி, நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சிலர் அரசியலுக்கு வர முயல்கிறார்கள் என திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன் குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் அடுத்த கண்டமங்கலம் அண்ணா திடலில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் திமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் சபாபதி மோகன் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சபாபதி மோகன்; ‘நடிகர் ஒருவர் தான் உச்சத்தில் இருந்ததாகவும்,400 கோடி சம்பாதித்தேன், 200 கோடி சம்பாதித்தேன்,
இப்போது உங்களுக்காக உழைக்க அரசியலுக்கு வருகிறேன்”
என்று ஒரு நடிகர் பேசி வருவதாகவும்,இவ்வாறு பேசும் எந்த ஒரு சினிமா நடிகனுக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணமே வரக்கூடாது என அவர் குற்றம் சாட்டினார்.மேலும்,
“2024-ல் கட்சி தொடங்குவார்கள்,
2025-ல் மாநாடு நடத்துவார்கள்,
அப்படியே நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்”
எனவும் விமர்சித்தார். மேலும் அரசியலுக்கு வர நினைப்பவர்கள் முதலில் தமிழ்நாட்டுக்காக பாடுபட வேண்டும்,உழைக்க வேண்டும்,
போராட வேண்டும்,சமூக நீதிக்காக போராட வேண்டும், மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும்,மொழி உரிமைக்காக போராட வேண்டும்,
தமிழ்நாட்டு மக்களோடு கலந்து வாழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இதனுடன்,
நடிகர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளில் பேசியது மொத்தம் 72 நிமிடங்கள்தான் என்றும்,
ஆனால் 72 வயதாகும் சபாபதி மோகன் என்பவர் தினமும் 70 நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் சாடினார். மேலும் பொருளாதாரம் தொடர்பாக பேசிய அவர்,
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பாராட்டும் நிலையில்,
முதலமைச்சரிடம் வந்து பிரதமர்
“நகி ஹை… இல்லை… தமிழ்நாடு நகி ஹை… ஜீரோ ஹை”
என்று கூறுவதாக தெரிவித்தார்.
“தமிழ்நாட்டுக்காக ஒன்றுமே இல்லை என்று சொல்கிறீர்களா?”
என்று அவர் கேள்வி எழுப்பினார்.

















