மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைத்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இறுதி கட்ட பராமரிப்பு பணிக்காக மூன்று மாதத்திற்கு முன்பு பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். பாலம் 3 மாதத்தை கடந்து மூடப்பட்ட நிலையில் இன்றைக்குள் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று பல்வேறு இயக்கங்கள் அறிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் அமைச்சர் மெய்யநாதன் பாலத்தை திறந்து வைப்பார் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட வந்த நிலையில் இன்று காலை பாலத்தின் குறுக்கே கனரக லாரியை விட்டு ஒருவர் மட்டுமே சென்று வரும் நிலையில் நெடுஞ்சாலை துறையினர் வழியை மறைத்து விட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அமைதி அடைந்துள்ளனர். வழியை திறக்காமல் காவல்துறையினரை வைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்தி அனுப்பி விடுவதால் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக பாலம் மூடப்பட்டிருந்த நிலையில், விளம்பர திமுக அரசின் விளம்பர மோகம் காரணமாக அமைச்சர் திறக்க வேண்டும் என்ற நிலையில் லாரியை குறிக்கப்பட்டு பாலத்தை மறைத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல் பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

















