மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 21 ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது.அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான 85 வது ஆண்டு சந்தனக்கூடு வைபவம் இன்று விடியற்காலை 3.00 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதில் சென்னை,தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சீடர்கள், பங்கேற்றனர். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.மேலும் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

















