February 11, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

by sowmiarajan
December 26, 2025
in News
A A
0
அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர் சேர்க்கை சரிந்து வருவது குறித்து திமுக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித்துறையின் அவலநிலை குறித்துப் பல்வேறு புள்ளிவிவரங்களை முன்வைத்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் காலனி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் பலியானதும், கள்ளக்குறிச்சியில் பராமரிப்பின்றிப் புதர் மண்டிய பள்ளியில் பாம்பு கடித்து இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், துறையை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, துணை முதலமைச்சர் உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவரைப் போலச் செயல்படுவதால் யாராலும் கேள்வி கேட்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் சாடினார்.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சி குறித்து ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் உயர்கல்விச் சேர்க்கை 52 சதவீதமாக உயர்ந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், 2015-16 காலகட்டத்தில் 75.52 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது வெறும் 45.10 லட்சமாகக் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது, சுமார் 30 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மாணவர் சேர்க்கை விகிதம் 42.43 சதவீதத்தில் இருந்து 37.92 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளும், மாணவர்களின் தங்குமிடமான 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் விடுதிகளும் மூடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர், கல்விக்கடன் ரத்து மற்றும் நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகள் இதுவரை காற்றிலேயே பறப்பதாகக் கூறினார். எடப்பாடியார் ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மடிக்கணினிகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும், தற்போது மீண்டும் தேர்தல் வருவதால் வாக்கு வங்கியைக் குறிவைத்து கல்லூரி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் விமர்சித்தார். எடப்பாடியார் கொண்டு வந்த 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மற்றும் 14 வகையான இலவசக் கல்வி உபகரணங்கள் போன்ற திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாததே மாணவர்கள் சேர்க்கை குறைய முதன்மைக் காரணமாகும்.

திமுக அரசின் வாரிசு அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் தோழமைக் கட்சிகள், இத்தகைய கல்வித்துறைச் சீரழிவுகள் குறித்து மௌனம் சாதிப்பது மக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சர் மக்களை நம்பாமல் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பி அரசியல் நடத்தி வருவதாகவும், இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்த எடப்பாடியார் தலைமையில் ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மக்களாட்சியை நிலைநிறுத்தும் என்று ஆர்.பி.உதயகுமார் உறுதிபடத் தெரிவித்தார்.

Tags: AIADMK Udhayakumardecreasegovernmentschoolsstudents
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

Next Post

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

Related Posts

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது
News

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்
News

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்
News

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது
News

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026
Next Post
ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

February 9, 2026
பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

August 11, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

0
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

0
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

0
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

0
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026

Recent News

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.