August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு நடக்கக் கூடாது — தி.மு.க. அரசு ஊழலில் மூழ்கியிருக்கிறது; எடப்பாடியார் ஆட்சியே தமிழகத்தை மீட்டெடுக்கும்” — ஆர்.பி. உதயகுமார்

by sowmiarajan
November 8, 2025
in News
A A
0
“வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு நடக்கக் கூடாது — தி.மு.க. அரசு ஊழலில் மூழ்கியிருக்கிறது; எடப்பாடியார் ஆட்சியே தமிழகத்தை மீட்டெடுக்கும்” — ஆர்.பி. உதயகுமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத்தின் சார்பில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது:
“தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அ.தி.மு.க. வரவேற்கிறது. ஆனால் இதில் அரசியல் கட்சிகள் சார்பில் செயல்படும் வாக்குச் சாவடி முகவர்கள் (BLO) மூலம் முறைகேடுகள் நடக்கும் அபாயம் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது,” என்றார். அவர் மேலும், “தி.மு.க. ஆதரவாளர்கள் சில இடங்களில் வாக்காளர் திருத்தப் பணிகளில் தலையிடும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் பட்டியலின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே நிர்வாகிகள் விழிப்புடன், கடுமையான கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

 “களப் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவார்கள். வெளியூர் சென்றவர்கள் உடனடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களின் வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தற்போது சரிபார்ப்பு நடைபெறுகிறது. வாக்காளர் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், படிவம் 6 மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வை குறிப்பிட்டு, “எடப்பாடியார் அங்கு சென்றபோது, பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அதிமுக ஆட்சியே மீண்டும் வர வேண்டும் என்று கூறினர். அதிமுகவுக்கு எதிராக கூட தி.மு.க. சேலை அணிந்திருந்த பெண்களே இரட்டை இலையைக் காட்சியளித்தனர்,” என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
“தற்போதைய தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்தில் ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பள்ளிக்கரணையில் கட்டிடம் கட்டுவதற்கே ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக தகவல் உள்ளது. இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் தமிழக மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.   “நெல்லின் ஈரப்பதம் அதிகம் என்பதைக் காரணமாகக் காட்டி, தி.மு.க. அரசு நெல் கொள்முதலை தாமதப்படுத்துகிறது. ஆனால் எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் மத்திய அனுமதியைப் பெறுவதற்கு முன்பே 22% ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்தோம். இப்போது தி.மு.க. அரசு அதனைச் செய்ய முடியவில்லை,” என அவர் கூறினார். மேலும், “58 கால்வாய் திட்டம், திருமங்கலம் பிரதான கால்வாய் திட்டம் ஆகியவற்றில் தண்ணீர் திறப்பதற்கும் கடுமையாக கோரிக்கை வைத்த பிறகே தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தி.மு.க. அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

 “இன்றைய நிலையில், தமிழகத்தை மீட்டெடுக்கும் திறன் எடப்பாடியாரிடம்தான் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும்.
இப்போது தி.மு.க. ஒரு ஓட்டுக்காக ரூ.50,000 கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளாக தி.மு.க. அரசு ஒரு மடிக்கணினி கூட வழங்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கியதால் 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்க டெண்டர் விடுவதாக அறிவிக்கிறது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவார்,” என்றார்.

 “நடிகர் விஜய், அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டோர் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர். அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ‘கூட்டணி தர்மம்’ என்ற பெயரில் வாய் திறக்க மறுக்கின்றன.எனினும், 2026 ஆம் ஆண்டில் மக்கள் தீர்மானம் எடுத்து விட்டனர் — ‘எடப்பாடியாரே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்’,” என ஆர்.பி. உதயகுமார் உறுதியுடன் தெரிவித்தார்.

Tags: “thereadmkcontenteducationfashionguidehowtoirregularitiesmusicprocessshouldtipstraveltrendingtrickstutorialviralvoter
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வனவிலங்கு தாக்குதல்களால் கொடைக்கானல் மேல்மலை கிராம மக்கள் அச்சம்: மன்னவனூர் சுற்றுலா மையம் முற்றுகை!

Next Post

பக்கவாதம் தடுப்பு விழிப்புணர்வுக்கு மாரத்தான் ஓட்டம்  சரவணம்பட்டியில் 1000 பேரின் மாரத்தான் உற்சாகம்!

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
பக்கவாதம் தடுப்பு விழிப்புணர்வுக்கு மாரத்தான் ஓட்டம்  சரவணம்பட்டியில் 1000 பேரின் மாரத்தான் உற்சாகம்!

பக்கவாதம் தடுப்பு விழிப்புணர்வுக்கு மாரத்தான் ஓட்டம்  சரவணம்பட்டியில் 1000 பேரின் மாரத்தான் உற்சாகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

July 26, 2026
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு – அரசை கண்டித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு – அரசை கண்டித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்

December 29, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.