December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

by Priscilla
October 15, 2025
in News
A A
0
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
0
SHARES
21
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய துயரச்சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு நாட்கள் நடைபெறும் சட்டசபைக் கூட்டத் தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. அதன் முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், கரூர் துயரச் சம்பவம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார்.

அவர் தெரிவித்ததாவது:
“தவெக சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசு 11 நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தது. கூட்டத்தின் பாதுகாப்புக்காக மொத்தம் 606 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். கோரிக்கை மனுவில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதைவிட அதிகமான மக்கள் திரண்டனர். மேலும், தவெக தலைவர் விஜய், அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கூட்டத்திற்கான அடிப்படை வசதிகள், குடிநீர், உணவு, பெண்களுக்கான தனி வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். மீட்புப் பணிக்காக வந்த ஆம்புலன்ஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு மாறாக, அதே இடத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒழுங்காக நடந்தது. அப்போது 12,000 பேர் பங்கேற்றிருந்தாலும் எந்தத் துயரமும் நிகழவில்லை,” எனவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து முதல்வர் உருக்கமாக கூறுகையில்,

“நான் 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் பல பெரிய நிகழ்வுகளை நடத்தியிருக்கிறேன். சட்ட விதிமுறைகளையும் பொது ஒழுங்கையும் மதித்து நடத்தினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. விதிகளை மீறும்போது பாதிக்கப்படுவது கட்சித் தொண்டர்கள்தான். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். ஆனால், முக்கியமாக கரூர் போன்ற துயரச்சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழக்கூடாது என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Tags: assemblykarurKARUR STAMPEDEmk stalintamil naduTN CHIEF MINISTERtn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Next Post

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

Related Posts

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்
News

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி
News

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி
News

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
Next Post
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் - EPS குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

0
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

0
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

0
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

0
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025

Recent News

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.