May 13, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் 32-வது பட்டமளிப்பு விழா: 376 மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாகப் பட்டம் வழங்கினார்!

by sowmiarajan
November 8, 2025
in News
A A
0
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் 32-வது பட்டமளிப்பு விழா: 376 மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாகப் பட்டம் வழங்கினார்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான திரு. ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

விழாவில் ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.

பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கலா அவர்கள் விழாவில் கலந்துகொண்டவர்களை வரவேற்று, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்தும், கடந்த ஆண்டில் பல்கலைக்கழகம் செயல்படுத்திய முக்கிய திட்டங்கள் குறித்தும் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார். குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எவ்வாறு பயன்பட்டன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இந்த விழாவில், பல்கலைக்கழகத்தில் பயின்ற 376 இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் நேரடியாகப் பட்டங்களை வழங்கினார். மேலும், விழாவில் கலந்துகொள்ளாத 8111 மாணவிகள் தங்களின் பட்டங்களைப் பெற உள்ளனர்.

ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கீதாஞ்சலி தாஷ் அவர்கள் இந்த விழாவில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மாணவிகளிடம் காணக்கிடைக்கும் கல்விப் பாரம்பரியம், அவர்களின் குடும்பங்களின் உன்னத அர்ப்பணிப்பு, மற்றும் 21ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெண்ணின் மகத்தான பயன்படுத்தப்படாத திறன் ஆகிய மூன்று தனித்துவமான இழைகளின் ஒருங்கிணைப்பைக் கண்டு வியப்பதாகத் தெரிவித்தார்.

அன்னை தெரசாவின் பொன்மொழியான, “நாம் அனைவரும் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது, ஆனால் நாம் சிறிய விஷயங்களை மிகுந்த அன்புடன் செய்ய முடியும்,” என்பதைக் கல்வியின் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய சாரம்சமாக அவர் வலியுறுத்தினார்.

பேராசிரியர் கீதாஞ்சலி தாஷ் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியதாவது: “கல்வி என்பது அறிவின் குவிப்பாக மட்டுமல்ல, இரக்கம், பணிவு மற்றும் சேவையை உள்ளடக்கியதாகும். இது மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த கருவி, தன்னம்பிக்கையை உருவாக்குகிறது, சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், கல்வி உங்களுக்குச் சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பைத் தேர்ந்தெடுக்கும் புத்திசாலித்தனம் மற்றும் வழிகாட்டியாக திகழ்கிறது.”

மேலும், அவர் நாட்டின் பெண் நிதி அமைச்சரான திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை முன் உதாரணமாகக் காட்டி, அவரைப் பார்த்து மாணவிகள் பொருளாதார நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த விழாவில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான திரு. கோவி. செழியன் அவர்கள் பங்கேற்பார் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் கலா, பேராசிரியர்கள், முனைவர்கள், சிறப்பு விருந்தினர்கள், பட்டம் பெற்ற மாணவிகளின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: COLLAGEDINDIGUL DIST NEWSEDUCATION NEWSGOVERNERKODAIKANAL NEWSRN RAVItamilnaduTAMILNADU UNIVERSITYWOMEN COLLAGE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்: தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு வீதி நாடகம் மூலம் பிரசாரம்!

Next Post

இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி

Related Posts

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்
News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது
News

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
News

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
News

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
Next Post
இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி

இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

0
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

0
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Recent News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.