மயிலாடுதுறை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் படுகாயம் ஏற்பட்டு மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், மதுரையில் இருந்து சிதம்பரம் நோக்கி பயணிகளுடன் சென்ற மற்றொரு அரசு பேருந்தும், இன்று அதிகாலை மயிலாடுதுறை அருகே கூறநாடு பகுதியில் நேருக்கு நேர் மோதின. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மயிலாடுதுறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் மொத்தம் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறு நபர்களில்
மயிலாடுதுறை இருந்து சென்ற அரசு பேருந்து டிரைவர் விவேக் கண்டக்டர் கனி ராஜா மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்து டிரைவர் சரத்குமார் நாகராஜ் மற்றும் இரு பேருந்துகளில் பயணித்த பயணிகள் இருவர்கள் ஆகியோர்களுக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்றவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்














