கட்சி பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளை முதலலைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் 234 தொகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்தவகையில், இன்று கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக அரசின் சாதனைகளை தங்களது பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கட்சி பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும், உழைப்பவர்களுக்கு அதற்கேற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் கூறியதாக தெரிகிறது. ஒற்றுமையுடன் பணியாற்றி 200 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் தெரிவித்தனர்.