இனிமேல் 15 நாட்களில் வாக்காளர் அட்டை : தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு !

டெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இனிமேல் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தாலும், ஏற்கனவே உள்ள வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்தாலும், 15 நாட்களுக்குள் அந்த அட்டை வாக்காளரிடம் வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை நீங்கும் என்றும், மக்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்ப நிலையில் இருந்து அட்டை வந்து சேரும் வரைக்கும் அனைத்தையும் டிராக் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொகுப்பான டிஜிட்டல் செயலி – புதிய முயற்சி

வாக்காளர் அட்டையின் தயாரிப்பு, அச்சிடல், தபால்துறை மூலமாக அனுப்புதல் உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்தையும் வாக்காளர்கள் கண்காணிக்கக்கூடிய வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப செயலி ஒன்றையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

வாக்காளர் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

  1. தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டல் (NVSP) இணையதளத்திற்கு செல்லவும் – https://www.nvsp.in
  2. மேல் வலது மூலையில் உள்ள Signup பொத்தானை கிளிக் செய்யவும்.
  3. உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  4. உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கி OTP மூலம் கணக்கைச் சரிபார்க்கவும்.
  5. பின்னர், Form 6-ஐ தேர்வு செய்து புதிய வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பிக்கவும்.
  6. தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, உங்கள் விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

விண்ணப்ப நிலையை எவ்வாறு கண்காணிக்கலாம் ?

  1. NVSP போர்ட்டலுக்கு உள்நுழையவும்.
  2. “Track Application Status” பகுதியில் உங்கள் விண்ணப்ப எண்ணை உள்ளிடவும்.
  3. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ‘Submit’ பட்டனை அழுத்தவும்.
  4. உங்கள் விண்ணப்ப நிலை மற்றும் அட்டையின் தற்போதைய நிலையை காணலாம்.
Exit mobile version