TVK தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, நெல் கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூபாய் 3,500ஆக உயர்த்த வேங்கடரமணன் பேட்டி

தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, நெல் கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 500 ஆக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும், மயிலாடுதுறையில் உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்கப்படும் அரிசி மூட்டைகள், கிடங்கில் உள்ள இருப்புகள், நெல்லை அரவையாக்கும் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். நெல் மூட்டைகளை சோதனை செய்து அமைச்சர் எடை போட செய்து சரிபார்த்தார். விற்பனைக்கான பில்லை சரி பார்த்த அமைச்சர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கடரமணன் கூறுகையில் கடந்த காலங்களில் 35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 55 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இதற்கேற்ப, நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகச் சேமிக்க கூடுதல் கிடங்குகளை (Godowns) மேம்படுத்தவும், கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரைவை மற்றும் போக்குவரத்து: டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் அனைத்தும் நேரடி கொள்முதல் மூலமே பெறப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கவும், எலி போன்றவைகளால் சேதமடையாமல் இருக்கவும், தங்குதடையின்றி அரைவை மில்களுக்கு (Hulling units) அனுப்பவும், போக்குவரத்து வசதிகளை துரிதப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 3,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசாணை மூலம் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும், உரத் தட்டுப்பாடு மற்றும் மும்முனை மின்சாரப் பிரச்சினை குறித்தும் உரிய துறைகளுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும். குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள்: மாவட்டத்தில் உள்ள கடலோர மற்றும் மீனவக் கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சிடி ஸ்கேன் (CT Scan) தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறைக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும். “மக்களின் தேவைகளையும் விவசாயிகளின் கோரிக்கைகளையும் அறிந்து, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, போர்க்கால அடிப்படையில் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்

Exit mobile version