March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

வைகாசி விசாகம்

by Satheesa
September 23, 2025
in Bakthi
A A
0
வைகாசி விசாகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.

உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் “வைசாக’ மாதம் என்றிருந்து பின்னாளில் “வைகாசி’ என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை “வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

“வி’ என்றால் “பட்சி’ “சாகன்’ என்றால் “சஞ்சரிப்பவன்’ மயில் மீது வலம்
வரும் இறைவன் என்பதால் “விசாகன்’ என்றும் வழங்குவர் முருகனுடைய வாகன மாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகை வனுக்கும் அருள்கின்ற தன்மையை முரு கப்பெருமானிடத்தில் காணலாம்.

இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிN~கம் செய்வர். முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி.

குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருக னை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம் அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலா பிN~கம் செய்வர். அன்றைய தினம் விரத மிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானிடத்தால் சகல சௌபாக்கி யங்களும் கிடைக்கும். வைகாசி விசாகநாளில் முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்’ எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய, ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார் அப்போது அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, “குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார்.

பத்மாசுரன் என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண் டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கிவிட்டான்.

பிறகென்ன, இப்படி ஒருவன் பிறக்க முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம் முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார்.

சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

சிவன், உடனடியாக விநாயகரை அனுப்பி இருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக் கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி கங்கைநதியில் விட்டார் அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார்.

இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு “சுபு;ரமண்யன்’ என்ற பெயரே தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது. முருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார்.

பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியை கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக் கடலையே கலங்கச் செய்தது, உலகைச்சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதி யாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.

குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
முருகப்பெருமானின் அவதார நன்னாளில், அவர் குடிகொண்டுள்ள மலைக் கோவில்களுக்குச் சென்று, நல்லருள் பெற்று வருவோம்.

Tags: Aanmeegamdivonationalmurugan templetamilnaduVaikasi Visakhapatnam sirapukal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 23 SEP 2025 | Retro tamil

Next Post

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 23, 2025 (செவ்வாய்க்கிழமை)

Related Posts

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை
Bakthi

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
Bakthi

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

March 3, 2026
மயிலாடுதுறையில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு சமுத்திர தீர்த்தவாரிக்காக பூம்புகாருக்கு புறப்பட்ட பரிமளரெங்கநாதர் சுவாமிகள்
Bakthi

மயிலாடுதுறையில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு சமுத்திர தீர்த்தவாரிக்காக பூம்புகாருக்கு புறப்பட்ட பரிமளரெங்கநாதர் சுவாமிகள்

March 3, 2026
கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
Bakthi

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

March 1, 2026
Next Post
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 23, 2025   (செவ்வாய்க்கிழமை)

இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 23, 2025 (செவ்வாய்க்கிழமை)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

March 5, 2026
காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

0
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Recent News

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.