தென்காசி : தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடும் வெப்பத்தால் மக்கள் வெயிலில் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முதியோர் வெயிலைத் தவிர்த்து வீட்டிற்குள் தங்கி வருகின்றனர்.
இந்த சூழலில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் கோயில் அருகே உள்ள நான்கு முக்கு சாலையில், வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றார். ஆனால் பரபரப்பாக சென்ற வாகனங்களை கடந்து செல்ல முடியாமல் திணறினார்.
இந்நிலையில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ராஜன், துரிதமாக செயல்பட்டு வாகனங்களை நிறுத்தி, மூதாட்டியின் கையைப் பிடித்து பாதுகாப்பாக சாலையை கடக்க உதவினார்.
இந்த மனிதாபிமான செயல் அப்பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியதும், அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.