- தமிழக பா.ஜ. மீது அவதூறு பரப்புவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- அனைத்து கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பது வாடிக்கை தான். தி.ம.க., கூட்டணியில் நாங்களும் அதிக தொகுதிகளை கோருவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
- ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் பாரம்பரிய தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய, இனி ரூ.200 கட்டணம் கட்டாயம் என்று அறிவுறுத்தலை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். வலியுறுத்தி உள்ளார்.
- தமிழ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை, ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- ராமதாசுடன் ஒரு பக்கம் மோதல், நிர்வாகிகள் நீக்கம் போன்ற சிக்கல்களுக்கு இடையே பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.
- கல்வித்துறை சீரழிவால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலையில், அதை சீர் செய்ய அரசு அக்கறை காட்டாதது ஏன் என்று தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- பயங்கரவாதத்தை தனது மண்ணில் ஒழிக்க முடியவில்லை என்றால், இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் உதவி கோரலாம், என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
- இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் இரு நாடுகளுக்கு இடையிலானது அல்ல. அது இந்தியா – ‘டெரரிஸ்தான்’ இடையிலானது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
- பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பயங்கரவாத வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, இஸ்ரேலிய அமைச்சர்கள் இருவருக்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் நார்வே ஆகிய 5 நாடுகள் இன்று தடை விதித்துள்ளன.
- ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் திடீரென முடங்கியது. இதனை அதிகம் பயன்படுத்தும் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.