August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

சேப்பாக்கை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது திருப்பூர் தமிழன்ஸ்!

by Divya
July 2, 2025
in Sports
A A
0
சேப்பாக்கை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது திருப்பூர் தமிழன்ஸ்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 தொடர் பரபரப்பாக நடந்து வருகின்றது. இதில் 8 அணிகள் கோப்பைக்காக மோதியுள்ளன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இதில் பங்கேற்றன.

மொத்தம் 28 லீக் போட்டிகள் முடிவில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன.

7 லீக் ஆட்டங்களில் அனைத்திலும் வெற்றி பெற்று தோல்வியின்றி பிளேஆஃப்ஸ் சென்ற அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸிடம் வீழ்ந்தது.

திருப்பூர் தமிழன்ஸின் வரலாற்றுச் சாதனை :

சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் TNPL வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது. அமித் சாத்விக் மற்றும் சசிதேவ் ஆகியோர் அரைசதமடித்து அணியை பலப்படுத்தினர். குறிப்பாக, சசிதேவ் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 203 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் அபராஜித்தைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைத்தும் வீழ்ந்தனர். 30 ரன்கள் மட்டுமே எடுத்த அபராஜித் வெளியேறியதும், சேப்பாக் அணி 113 ரன்னில் சுருண்டது.

பந்துவீச்சில் எசக்கிமுத்து மற்றும் மதிவாணன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 79 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு அபார வெற்றியை ஏற்படுத்தினர்.

இன்றைய எலிமினேட்டர் ஆட்டம் :

இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில், ஆர். அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஜெயராமன் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றியாளர், குவாலிஃபையர் 2-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸை சந்திக்கவுள்ளார்

Tags: chepaukThirupur tamilansTNPLTNPL finals
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருமணமான நான்காவது நாளில் வரதட்சணை கொடுமை : தாய் வீட்டில் தூக்குப்போட்டுப் பலியான 22 வயது மணப்பெண் !

Next Post

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும் – முதல்வர் ஸ்டாலின் உறுதியளிப்பு

Related Posts

தென்னிந்திய அளவிலான கராத்தே சிலம்பம் யோகாபோட்டிகள்
News

தென்னிந்திய அளவிலான கராத்தே சிலம்பம் யோகாபோட்டிகள்

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி
News

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
Next Post
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும் – முதல்வர் ஸ்டாலின் உறுதியளிப்பு

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும் – முதல்வர் ஸ்டாலின் உறுதியளிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.