திருவள்ளூர் அருகே தனது கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தையும், குளிர்சாதன சவப்பெட்டியையும் அர்ப்பணித்த அதிமுக இளைஞரை கிராமமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் கிராமமக்கள் அவசர தேவைக்காக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டுமென்றால் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் பிரசவம் போன்ற மருத்துவ அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படுவதால் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அந்த பகுதியை சேர்ந்த கடம்பத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ராஜன் என்பவர் தனது பிறந்த நாளையொட்டி கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தையும், இலவச குளிர்சாதன சவப்பெட்டி வசதியும் தனது கிராம மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தையும், இலவச குளிர்சாதன சவப்பெட்டியையும் கிராம மக்களுக்கு வழங்கினார். மேலும் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகளும், ஏராளமான கிராமமக்களும் கலந்து கொண்டனர். கிராம மக்களுக்கு அவசர தேவைக்கு இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை அர்ப்பணித்த அதிமுக இலக்கிய அணி செயலாளர் ராஜனை அப்பகுதி கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
















