மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித்;திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்; புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக வரலாறு. இங்கு ஆண்டு வைகாசித்;திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகிய தெப்போற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, சுவாமியும், அம்பாளும், சிறப்பு அலங்காரத்தில், ஆலயத்தின் திருக்குளமான பிரம்ம தீர்த்தத்தில், அமைக்கப்பட்டு இருந்த, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு எழுந்தருளினர். மசாலா சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை, மற்றும் சோடச பூஜையும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம், ஆலய பிரம்ம தீர்த்த குளத்தில், 3 சுற்றுகள் வலம் வந்தது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
















