மண் பானையில் நாமும் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்ற பிறகு மிகக் குறைந்த அளவில் விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவித்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் தமிழக அரசை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழி தமிழில் உண்டு அதற்கு ஏற்றார் போல் சட்டியில் எதுவும் இல்லை எனக் கூறி வெறும் பண்பானையை கையில் ஏந்தி அதில் நாமமிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் கூறும் போது….
தமிழ்நாடு முதலமைச்சர் எதுவும் வாய் திறக்க மாட்டார். முதல் போட்ட அமைச்சர் தான் வாயை திறந்து பேசுகிறார். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக இருக்கிறார். தமிழக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறோம். உடனடியாக தமிழக அரசு விவசாயிகள் பெற்ற பயிர் கடண்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலையை தர வேண்டும். குவிண்டால் ஒன்றுக்கு 5000 ரூபாய் தந்தால் விவசாயிகள் எந்தவித நிவாரணம் கேட்க மாட்டார்கள் என்றார்.
















