ரிசர்வ் வங்கி கடந்த மே 21ல் தங்க நகை கடனுக்காக புதிய விதிமுறைகளை வெளியிட்டுருந்தாங்க. அதுல தங்க நகையின் மதிப்பில 75% மட்டுமே நகை கடன் வழங்கப்படும் என்று சொல்லப்ட்ருன்ச்சி. அதாவது ஒரு நகையின் மதிப்பு 100 ரூபாயாக இருந்தா அதுக்கு 75 ரூபாய் வரை மட்டும் தான் நகை கடன் பெற முடியும்ன்னு சொல்லி இருந்தாங்க. இது இல்லாம, தங்க நகை கடன் வாங்குரவங்க அந்த தங்க நகைக்கான உரிமையாளர்கள் நீங்கள் தான் அப்படின்ற ஆதாரத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்ன்னு பல்வேறு விதிமுறைகள் சொல்ல்பட்ருந்தது
இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிச்சி இருந்தாங்க…இப்படி இருக்க நிலையில ரிசர்வ் வங்கி தங்க நகை கடன்களில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்திருக்காங்க…
அதன்படி, ரூ. 2.5 லட்சம் வரையிலான தங்க நகை கடனுக்கு நகையின் மதிப்பில் 85% வரை கடன் வழங்கலாம்ன்னு சொல்லபட்ருக்கு. அதாவது ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகையை அடகு வைக்கும்போது ரூ. 85 ஆயிரம் வரை கடன் பெற முடியும்..
அடுத்ததா, ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 80% வரையிலும், ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு 75% வரை கடனும் வழங்கப்படும் எனத் சொல்லபட்ருக்கு…
அதே மாதிரி நகை உரிமைக்கான ஆவணத்தை கேட்க வேண்டும் என்ற நிபந்தனை இனி கிடையாது. அதாவது, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்குட்பட்ட கடன் வழங்குவதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு உரிய கிரெடிட் மதிப்பீடு செய்யப்படும்ன்னு சொல்லபடுது.
கடைசியா, 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடபட்ருக்கு… இந்தப் புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ருக்கு. இந்தப் புதிய விதிமுறையால கடன் கொடுக்கர்து அதிகரிக்கும், கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுது…