சிந்து நதி நீர் அமைப்பில் இருந்து இந்திய மாநிலங்களுக்கு அந்த நீரைத் திசை திருப்ப கால்வாய் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்டமாக, பியாஸ் நதியிலிருந்து ராஜஸ்தான், ஸ்ரீ கங்காநகருக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல, 130 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் 2 ஆண்டுகளுக்குள் முழுவதும் கட்டி முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, 70 கி.மீ. தொலைவிற்கு அந்தக் கால்வாய் யமுனை நதி வரை நீட்டிக்கப்படும். இதன் மூலம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லிக்குத் தண்ணீர் கிடைக்கும்.
1 கட்டத்திற்கான திட்டமிடப்பட்ட காலக்கெடு 3 ஆண்டுகள், 2 ஆண்டுகளில் அதை முடிக்க முடியும் என்றும் 2.5 ஆண்டுகளுக்குள் நீர் திசைதிருப்பல் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தப்படுவதால், ரபி பயிர் பருவத்தில் சவால்கள் ஏற்படக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. “ரபி பருவத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக நீர் கிடைக்காமல் போனால், பயிர்சேதத்திற்கு வழிவகுக்கும். குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படலாம்.
இருப்பினும், பாகிஸ்தானின் காரிஃப் பயிர்கள் பருவமழைக் காலத்துடன் ஒத்துப்போவதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை” என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.
பருவமழை ஓய்ந்தவுடன், செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதிகளில் உள்ள தனது நீர்மின் நிலைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிக்க, நீரை வேகமாக வெளியேற்றி தூர்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன