தரங்கம்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 86பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராம பிரசாத். மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.














