டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.334 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 15% அதிகமாக இருந்தாலும், சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாயும் ஆண்டுக்கு 10% உயர்ந்து ரூ.4,778.91 கோடியாக அதிகரித்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ.4,351 கோடியுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றமாக இருந்தாலும், சந்தை கணிப்புகளைக் குறைவாகவே உள்ளது.
நிறுவனம் தெரிவித்தபடி, தேயிலை விலை உயர்வு மற்றும் பிராண்டட் அல்லாத வணிகத்தில் காபி விலை மாற்றம் காரணமாக, காலாண்டின் EBITDA ஆண்டுக்கு 8% குறைந்து ரூ.615 கோடியாக குறைந்துள்ளது.
இந்தியாவில் தேயிலை மற்றும் உப்பு வணிகங்களில் வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. அடிப்படை அளவு அதிகரிப்புகள் இதனை ஆதரித்ததாகவும், இந்திய வணிகம் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பிரபலமான ‘டாடா சம்பன்’ பிராண்டு தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. ஆனால் Ready To Drink (RTD) பிரிவில் விற்பனை பருவகாலமற்ற மழையால் பாதிக்கப்பட்டதால், வெறும் 3% மட்டுமே வளர்ச்சி அடைந்தது.
சர்வதேச வணிகம் 5% வருவாய் வளர்ச்சியைக் கண்டதாகவும், இந்திய பேக்கேஜ் பானங்கள் பிரிவில் 12% வளர்ச்சியும், காபி பிரிவில் 67% வருவாய் வளர்ச்சியும் ஏற்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.