மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம் , 50க்கும் மேற்பட்டோர் சங்கத்தில் இணைந்து வெடி வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் :-
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்கள் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனிடையே மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் அலுவலர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கத்தை துவங்கி 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைந்து கையொப்பமிட்டுக்கொண்டனர் . புதியதாக இணைந்த நிர்வாகிகள் அனைவரும் தவெக துண்டினை அணிந்து வெடி வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். அடுத்தடுத்த மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பு கூட்டம் நடத்திய பிறகு நியமிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.














