தமிழகத்தில் பல சிவ ஆலயங்கள் சூரிய பகவானால் வழிபடப்பட்ட சிறப்புமிக்க தலங்களாக விளங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வரலாறு மற்றும் ஆன்மிக முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளன.
கொளப்பாக்கம் சூரிய தலம் (ராமாபுரம் அருகே)
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தலத்தில், சூரிய பகவான் ஈசனை ஆறு வாரங்கள் தொடர்ந்து வழிபட்டு அருள் பெற்றதாகக் கூறப்படுகிறது.
திருமங்கலக்குடி (கும்பகோணம் அருகே)
இங்கு அருளும் பிராணநாதேஸ்வரரும், அன்னை மங்களாம்பிகையும் நவகிரக தோஷங்களை நீக்கும் சக்தி வாய்ந்தவர்கள். சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன் இத்தலத்தை தரிசிக்க வேண்டும் என ஐதீகம் கூறுகிறது.
திருமியச்சூர் (திருவாரூர் – மயிலாடுதுறை சாலை)
சூரியனின் பாவங்களை நீக்க இங்கு தவம் செய்தார். தனது இழந்த ஒளியையும் மீண்டும் பெற்றுள்ளார்.
பாபநாசம் (திருநெல்வேலி அருகே)
நவகயிலாயங்களில் ஒன்று. இங்கு ருத்ராட்ச சிவலிங்கம் உள்ளதாகவும், சூரியன் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கச்சபேசுவரர் கோயில் (காஞ்சிபுரம்)
முருங்கை மர நிழலில் ஜோதிலிங்கமாக உள்ள ஈசனை சூரியன் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
சூரியமூலை (கஞ்சனூர் அருகே)
இங்கு கோடி சூரியர்கள் ஈசனை வழிபட்டதால் “ருத்ரகோடீஸ்வரர்” என்ற சிறப்புப்பெயர் பெற்றுள்ளார்.
திருப்பரிதி நியமம் (தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலை)
பாஸ்கரேஸ்வரர் அல்லது பருத்தியப்பர் என்றழைக்கப்படும் ஈசனை சூரியன் வழிபட்டார்.
திருச்செம்பொன்பள்ளி (தரங்கம்பாடி அருகே)
12 ஆதித்யர்களும் இங்கு சூரிய புஷ்கரணி அமைத்து சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். சௌரமகோற்சவம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
திருவாவினன்குடி (பழநி அடிவாரம்)
சூரியனின் ஆணவத்தை அழித்து, ஈசன் தன் நெற்றிக்கண்ணால் உலகிற்கு ஒளி தந்த இடம்.
திருநாகேசுவரம் (கும்பகோணம் அருகே)
சூரியனும் நாகங்களும் சேர்ந்து வழிபட்ட தலம். அப்பர் இந்த தலத்தை பாடியுள்ளார்.
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு – மாமல்லபுரம் சாலை)
துவாதச ஆதித்யர்கள் வேதபுரீஸ்வரரை வழிபட்டதால், இங்கு பல பெயர்கள் வழங்குகின்றன: பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி.
திருச்சோற்றுத்துறை (திருவையாறு அருகே)
சூரிய பகவான் வழிபட்ட இந்த தலத்தை திருநாவுக்கரசர் பதிகத்தில் பாடியுள்ளார்.
திருவாடானை (சிவகங்கை அருகே)
காசி போலவே, சூரியன் இங்கு 12 லிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டதாக புராணம் கூறுகிறது.