சீர்காழியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், தங்க நகைகள், விலை உயர்ந்த கடிகாரங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றதால் பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி தென்பாதி வி எஸ் ஆர் நகரில் சொந்த வீட்டில் விசித்து வருபவர் இன்ஜினியர் வீரா (41) இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் வீட்டினை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இதனுடைய அன்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவை திறக்கும் போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் 6 கிலோ வெள்ளி பொருட்கள் ஐந்து பவுன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கடிகாரங்கள் நான்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது . வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் இன்ஜினியர் வீராவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். உள்ளே இருந்த மற்றொரு அடுத்தடுத்த அறைகளில் இருந்த வீரக்குலையும் பூட்டை உடைத்து சாவகாசமாக திருடிச் சென்றுள்ளனர் இது குறித்த இன்ஜினியர் வீரா அளித்த புகாரியின் பேரில் சீர்காழி , சப் இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் சிறப்பு தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கை ரேகை பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இது சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியள்ளது













