விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் ஏழுசெம்பொன் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஞானசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்த சிவபக்தகள் மற்றும் பொதுமக்கள் 200 க்கு மேற்பட்டோர் ருத்ராட்ச மாலை அணிந்து விரதமிருந்து நடைபயணமாக திருவண்ணாமலை பாதயாத்திரை செல்கின்ற தருணத்தில் அங்கும் இயங்கும் பழநிவேலு கல்வி நிறுவனத்தின் ராஜேந்திரன் சார்பில் ) வரவேற்று மதியவேளையில் வடை பாயாசத்தோடு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. உடன்பாதயாத்திரை ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ஏழுமலை, ரமேஷ் குமார் மற்றும் கல்வி குழுமம் ஜெயராஜ் உடன் இருந்தனர்
















