அன்புமணியுடன் சந்திப்பு குறித்து மவுனம் கலைத்தார் ராமதாஸ்

விழுப்புரம் :
பட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் சைதை துரைசாமியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். “நீண்ட நாள் நட்பு காரணமாகவே அந்த சந்திப்பு நடந்தது” என அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தங்கியிருந்த ராமதாஸ், சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசினார். “சென்னைக்கு 2 நாட்கள் செல்கிறேன். சின்ன மகளும், கொள்ளு பேரனும் சென்னையில் இருக்கிறார்கள். மருத்துவ சோதனைக்காக அல்ல, நலமாகத்தான் இருக்கிறேன்” என்றார்.

அப்போது, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு,
“நீண்ட நாள் நட்பு உண்டு. அவருடன் பேசிக்கொண்டே இருக்கிறோம். அதேபோல சைதை துரைசாமியும் பழக்கமானவர். அதனால் இருவரும் வந்தார்கள்” என கூறினார்.

அதையடுத்து, அன்புமணி ராமதாஸுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து,
“பார்த்தாங்க, பேசுனாங்க… அப்புறம் வந்து சொல்றேன். இப்ப நேரம் ஆகிவிட்டது” எனக் கூறிவிட்டு, காரில் புறப்பட்டுச் சென்றார்.

Exit mobile version