வாஷிங்டன்:
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்துடன் நடைபெற்று வருகின்றன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உயர்ந்த பரஸ்பர வரிகளை அமெரிக்கா அறிவித்த பின்னர், ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்த கொள்கை அமலுக்கு வந்தது. இதையடுத்து, 60-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, சிலவற்றுக்கான வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
இந்தியாவுடன் தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிரம்ப், “இந்தியாவுடனான வரி தொடர்பான பேச்சுக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இரு நாடுகளுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், 90 நாள் வரி இடைநிறுத்தத்தின் போது ஆப்பிரிக்கா பயணம் செய்து, அங்கு அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தும் திட்டம் உள்ளதாகவும், அதற்கான ஒப்புதல் வெள்ளை மாளிகையில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.