மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம், பசுமைக்குடில் மூலம் காய்கறி வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம் மூலம் இஸ்ரேல் முறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு என்று என்று 15 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயம் செய்து வரும் பெண் விவசாயி, அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள் :-
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள் பதி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமொழி, இவரும் இவரது சகோதரர் வெங்கடேசன் என்பவரும் இணைந்து 15 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை ஒரு லாபகரமான கூட்டுப் பண்ணையாக மாற்றி நடத்தி வருகின்றனர்.
இன்றைய தேதியில் விவசாயம் என்பது வருமானத்தை தராத ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரம் சராசரிக்கும் கீழே இருப்பது விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லை என்ற நிலைமை காணப்படுகிறது. இதனைத் தவிர்க்க கூட்டுப் பண்ணை தொழில் அமைத்தால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மணிமொழி. இவர்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான சாகுபடிகள் கால்நடை வளர்ப்புகள் செய்து விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி வருகின்றனர். இவர் நிலத்தை பல்வேறு வகைகளாக பிரித்து பயிர் வகைகள் சாகுபடி ஒரு பகுதிகளும் நீண்ட காலம் பலன் தரும் மரங்கள் ஒரு பகுதியிலும் பசுங்குடில்கள் ஒரு பகுதியிலும் மீன் வளர்ப்பு ஒரு பகுதியிலும் நாட்டு மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு ஒரு பகுதிகளும் என்று பல்வேறு பிரிவாக நிலத்தைப் பிரித்துள்ளனர். இதில் தோட்டக்கலை பயிர்கள் சொட்டுநீர் பாசனம் இஸ்ரேலிய முறையில் வடிவமைத்துள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இயற்கை உரங்களை ஒவ்வொரு செடிகளுக்கும் தனித்தனியா செல்லும்படி வடிவமைத்துள்ளனர். மேலும் பயிர்களை அழிக்கும் களைக்கொல்லிகள் வளராமல் இருப்பதற்கு பாலி பேக் பயன்படுத்துகின்றனர். மேலும் நிலத்தின் ஒரு பகுதியில் பண்ணை குட்டை வெட்டி அதில் அதிகமாக லாபம் பெறக்கூடிய விரால் மீன் மற்றும் கெண்டை மீன் வவ்வால் மீன் ஆகியவை வளர்த்து தனியாக லாபம் பார்த்து வருகின்றனர். கத்தரிக்காய் வெண்டைக்காய் கொத்தவரங்காய் வெள்ளரிக்காய் குடைமிளகாய் சாமந்திப்பூ ஆகியவை பசுமை குடில் மூலம் வளர்க்கப்படுகிறது. மேலும் தேக்கு மரம், செம்மரம், மாமரம், தென்னை மரம், எலுமிச்சை மரம், சப்போட்டா, கொய்யா மரம், வாழைமரம், நாட்டு நெல்லி மரம், ஆகியவை தனியாக பணப்பயிர்களாக பலன் தந்து வருகின்றன. பசுமை குடிகளுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கியுள்ள நிலையில், பண்ணை தொழிலை எப்போ ஊக்குவித்து அரசு உதவிக்கரம் நீட்டினாள் இதுபோல் டெல்டா மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைத்து பயிற்சி அளிக்க முடியும் என்று பெண் விவசாயி மணிமொழி தெரிவிக்கின்றார். அரசு தங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

















