தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள பல கட்சிகளும் இப்பொழுதே தயாராகி வருகின்றனர். பல காட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் மட்டும் கூட்டணி இல்லை தனித்து தான் போட்டி என்று சொல்லி வேட்பாளர்களை அறிவித்துக்கொண்டு இருக்கிறார்.
இருந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை சேர்க்க முயற்சிகள் மறைமுகமாக நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதிமுக தலைவர்கள் தான் இந்த பேச்சு வார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார். இது கூட்டணி குறித்த சந்திப்பு இல்லை என்றும் தற்போதைய அரசியல் சூழல் பற்றி இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.