மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க பல அரசியல் கட்சிகள் சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். இது குறித்து பா.ம.க., தலைவர் மணி பேசுகையில், ”காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ளது. அகில இந்திய அளவில் நேரு, இந்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலை இல்லை. எனவே அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்,” என்று பேசினார் .
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் பேசுகையில், ”கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார்.இந்த செய்தி திமுக ஆதரவாளர்களிடம் மகிழ்ச்சியை தந்துள்ளது.