சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட புகாரத்தில் சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்த சிறுமியின் தாய் கதறி அழுதபடி மனு கொடுத்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியது :-
தரங்கம்பாடி அருகே சாத்தன்குடி கிராமத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி 17 வயதான சிறுமி மற்றும் , அவரை காதலித்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி பணமாக கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்த நிலையில், இது தொடர்பாக இறந்து போன இளைஞனின் உறவினர்கள், பெண்ணின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு வாகனங்களை அடித்து நொறுக்கினர். இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 30 ஆம் தேதி சிறுமியின் தந்தை தனது மகனை காணவில்லை என பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாமக, வன்னியர் சங்கம், மாவீரன் வன்னியர் சங்கம், அகில இந்திய முக்குலத்து புலிப்படை, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை, அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை, ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர், காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆயிரம் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர் இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வாயில் கதவுகளை பூட்டினர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளை மட்டும் காவல்துறையினர் உள்ளே அனுமதித்த நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பாமக, மாவீரன் வன்னியர் சங்கம், உள்ளிட்ட சங்கங்களின் பொறுப்பாளர்கள் வி ஜி கே மணி, சிற்றரசு தேவர், பாக்கம் சக்திவேல், ஏபிபி ராஜா, ஆறு தேவர், ஆலயமணி உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சிறுமி காணவில்லை என்றபோது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தால், உயிர் பலியை தடுத்து இருக்கலாம், மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தது மட்டுமில்லாமல், தற்கொலை தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த கண்டணத்துக்குரியது, ஜாதி பெயரை சொல்லி இது போல் பொய் வழக்குகள் பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி பாதிக்கப்பட்ட அவர்களது வீட்டுக்கு பதிலாக புதிய வீடு கட்டி தர வேண்டும், சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சிறுவன் தரப்பினர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு மற்றும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.













