புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் மற்றும் விழிப்புணர்வுப் பேச்சாளர் சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சான் ரேச்சல் (உண்மை பெயர் சங்கர பிரியா), தாயை சிறுவயதிலேயே இழந்துவிட்டு தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். தனது கருப்பழகை விருதாக மாற செய்தவர். நிற அடிப்படையிலான முன்னறிவுப் பாராட்டுகளை உடைத்தெறிந்து பல பட்டிமன்றங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் தன்னம்பிக்கை குறித்து உரையாற்றி வந்தவர்.
மாடலாகவும் செயல்பட்ட இவர், ‘மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019’, ‘மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019’, ‘Queen of Madras 2022’, ‘Miss Africa Golden India 2023’ போன்ற பட்டங்களை வென்று பெயர் பெற்றவர். 2020-ம் ஆண்டு ‘Miss Puducherry’ பட்டம் பெற்றிருந்தார். கடந்த வருடம் இவருக்கு திருமணமும் நடைபெற்றது.
இந்நிலையில், ஜூன் மாதம் தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், அவரின் நிலை மோசமடைந்தது. காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில், பேஷன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எடுத்த கடனில் ஏற்பட்ட நஷ்டம், மன அழுத்தத்திற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஆம் தேதி அதிக அளவு மருந்துகளை உட்கொண்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேச்சல், சிகிச்சை பெறும் நேரத்தில் திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல் போனார். பின்னர் வீடு திரும்பியபோது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின் ஜிப்மர் மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்.
அந்நிலையில், பல மாதங்களாக மன உளைச்சலுடன் போராடிய சான் ரேச்சல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.