கொரட்டூர் பகுதியில் நடந்த அமுத கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே அமுத கரங்கள் திட்டத்தின் கீழ் 209வது நாளாக பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தனது கையால் உணவு பரிமாறினார். அத்துடன் மண்டல குழு தலைவர் மூர்த்தி மற்றும் பகுதி செயலாளர் நாகராஜ் ஆகியோர் இணைந்து 1000 பேருக்கு காலை உணவை வழங்கினார்கள்.
பொதுமக்களுக்கு இட்லி, இடியாப்பம், வடை சப்பாத்தி பொங்கல்உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் காலை உணவை வாங்கி சென்றனர்.














