சென்னை:
திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் “பெரிய 0” வாக வாக்களித்து ஸ்டாலினுக்கு பைபை சொல்லப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்) வலியுறுத்தினார்.
அவர் அளித்த அறிக்கையில், “திமுக ஆட்சி கள்ளச்சாராய ஆட்சியாக மாறியுள்ளது. இதற்கான சாட்சி கள்ளக்குறிச்சி சம்பவம். மாணவர்கள் புத்தகப்பையில் அரிவாள்கள் வைத்துச் செல்லும் நிலை சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் சாட்சி. பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்களே சாட்சி” என்றார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, திமுகவின் அயலக அணியும், ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற இளைஞரணியின் கூட்டமும் குற்றச்சாட்டுக்குள்ளாகின. “ஸ்டாலின் மாடல் சமூக நீதிக்கு வேங்கைவயல் சம்பவம் தான் சாட்சி” என்றும், “ஆப்ரேஷன் கஞ்சா 2.0 முதல் 4.0 வரை அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன; இப்போது 2.0 மீண்டும் ‘லோடிங்’ நிலையில் உள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.
“அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழக மக்கள் தங்களைப் பெருமையுடன் பார்த்தனர். இன்று, ஜாமினில் வந்தவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்து, தலை குனிந்து வாழும் நிலைக்கு திமுக அரசு கொண்டு சென்றுள்ளது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
முடிவில், “2026 தேர்தலில் மக்கள் பெரிய ‘ஓ’ வாக வாக்களித்து ஸ்டாலினுக்கு பைபை சொல்வார்கள். அப்போது சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி!” என அவர் வேதனையுடன் கூறினார்.