சென்னை: எதிர்க்கட்சிகள் எந்த அமைப்பில் வந்தாலும், திமுக அரசின் செயல்பாடுகள் உறுதியானவையாகவே தொடரும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின். ”கடந்த காலங்களில் ஊர்ந்து வந்த தமிழகம் இன்று கம்பீரமாக நடைபோடுகிறது. சட்டசபையில் இதை நான் எடுத்துரைத்தபோது எதிர்க்கட்சி துணை தலைவர் ‘ஊர்ந்து’ என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நான் தவழ்ந்து என போட்டுக்கொள்ளுமாறு கூறினேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ‘‘தவழ்ந்து முதல்வர் ஆனவர்’’ என தெரிவித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதைப் பற்றி விளக்கமாகப் பதிலளித்த ஸ்டாலின், நம்மை எதிர்க்க கூடியவர்கள், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் சரி, எந்த கூட்டணியுடன் வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம்,’’ எனக் கூறினார்.
2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும், வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளைப் பற்றியும் கவலை இல்லை எனத் தெரிவித்தார். ‘‘நாம் நெருக்கடியை பார்த்து வளர்ந்தவர்கள். திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்று ஒன்றாக நிறைவேற்றி வருகிறோம். 7வது முறையாகவும் திமுக ஆட்சி அமையும்,” என்றார்.