பாஜக ஆட்சியில் தான் என் வீட்டிற்கு சிபிஐ ரெய்டுக்கு வந்ததது அதை பற்றி நான் ஒரு போதும் கவலைபடவில்லை மத்திய அரசு மீது என் கோபத்தை வெளிகாட்ட முடியவில்லை என ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் ஆவேச பேட்டி
மன்னார்குடி அருகே உள்ள மகாதேவப்பட்டினம் ஸ்வேத வராக விஷ்ணு கோயிலில் இருந்து 300 வருடங்கள் தொன்மை வாய்ந்த ஸ்வேத வராக விஷ்ணு தெய்வத்திருமேனி கடந்த 60 வருடத்திற்கு முன்னர் திருடப்பட்டு அந்த சிலை கலிபோர்னியாவில் உள்ள நார்த்தன் சைமன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்க வேண்டுமென ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கூறியதாவது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றியபோது, அமெரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட்டினம் ஸ்வேத வராக விஷ்ணு கோயிலில் இருந்து சுமார் 300 வருடங்கள் தொன்மையான சிலை கலிபோர்னியாவில் பாதடினா, நார்த்தன் சைமன் மியூசியத்தில் சிலை இருப்பது தெரிய வந்தது. அந்த சிலையை இங்குள்ள சிலைதானா என்பதை 1959 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட கலைஞர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிலையில் விஷ்ணு கையில் இருக்கும் சக்கரம் மட்டும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அது உண்மையிலேயே பஞ்சலோக சிலை தானா என்பதை உறுதி செய்வதற்காக வெட்டி எடுத்து பரிசோதித்துள்ளனர் அதன் பின்னர் இந்த சிலை கடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிலை இக்கோயிலில் காணாமல் போனது குறித்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில், எவ்வித புகார் தெரிவிக்கப்படவில்லை. புகார் தெரிவிக்கப்படவில்லை என்றால் இது அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்துள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த சிலையை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுக்குள் தமிழ்நாட்டிற்குள் உள்ள போலிசார் வீட்டிற்கு சிபிஐ வந்ததுனா என் வீட்டிற்கு தான் ஆனால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் உடைத்து குப்பை தொட்டியில் போட்டேன் அப்போ சிபிஐ யார் கட்டுபாட்டில் உள்ளது முதல்வர் ஸ்டாலின் , எடப்பாடியார் கட்டுபாட்டில் உள்ளதா மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது பாஜக ஆட்சியில தான் என் வீட்டிற்கு வந்தார்கள் அப்போ மத்திய அரசு மீது எவ்வளவு கோபம் இருக்கும் அதை நான் ஒருபோதும் வெளிகாட்டவில்லை என தெரிவித்தார்.
