தமிழ்நாடு முழுவதும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இரு விதமான படிப்புகளிலும் சேர 4.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, உயர் கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கி உள்ளனர்.
அதேபோல கலை அறிவியல் கல்லுாரிகளைப் பொறுத்த வரையில், மே 26ஆம் தேதி வரை மாணவர்களில் 2, 15, 809 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் கட்டணம் செலுத்தியோரின் எண்ணிக்கை 1,74,289 ஆக உள்ளது. இன்றோடு கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைகிறது. எனினும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரிகளை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.தேபோல பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்னும் அவகாசம் உள்ளது. ஜூன் 6ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.