நான் இல்லையென்றால் டிரம்ப் இல்லை – கொதித்தெழுந்த எலான் மஸ்க்

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்றார். அவரின் நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ் துறையில் தலைமை ஆலோசகராக எக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது ஆலோசனையின்படி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடங்கி பல நிதி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால், டிரம்பு ம்ற்றும் எலான் மஸ்கிற்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடித்தது. தொடர்ந்து சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகி இருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில், டிரம்ப் அரசு சார்பில் புதிய செலவு மற்றும் வரி மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது மற்றும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

இதனால் கோபமடைந்த மஸ்க், ‘நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். ‘நான் பென்சில்வேனியாவை வென்றிருப்பேன். நான் அதிக வித்தியாசத்தில் வென்றிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். துணை அதிபர் ஜேடி வான்சை அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Exit mobile version