உக்ரைன் மீது 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ரஷ்யா போரை தொடங்கிய நிலையில், மூன்றாண்டுகளை கடந்தும் இருநாடுகளுக்கிடையே மோதல் தீவிரமாகவே நீடித்து வருகிறது.
இந்த சூழலில், “போர் முடிவுக்கு வந்ததும் நான் அதிபர் பதவியிலிருந்து விலகுவேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி மேலும் கூறியதாவது : “எனது முதல் குறிக்கோள் ரஷ்யாவுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதே. தேர்தல் வெற்றி என் நோக்கம் அல்ல. போர்க் காலத்தில் மக்களுடன் துணை நிற்பதே எனது கடமை. போர் நிறுத்தம் ஏற்பட்டதும் உக்ரைனில் தேர்தலை நடத்த வேண்டுமென கோருவேன். அப்போது மக்கள் விருப்பப்படி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், 2019 ஆம் ஆண்டில் உக்ரைன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் 2024 பிப்ரவரியில் முடிவடைந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிப்பதால், அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்.













