கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கலைக் கல்லூரிகளுக்கு தேர்வு கட்டணம், அரியர் கட்டணம், சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் டிபிஎம்எல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் பகத்சிங் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் மாணவ மாணவிகள் கண்டன உரையாற்றி முழக்கமிட்டனர்.

















