சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இந்தநிலையில், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பா.ம.க-வுக்கு தாமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
டிசம்பர் 17-ம் தேதி முதல் ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பா.ம.க-வுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த இயலாது. ராமதாஸ் மட்டுமே தேர்தல் கூட்டணி பேச்சு நடத்த அதிகாரம் பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க சார்பில் அன்புமணி தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி இருப்பதாகவும், அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்டவிரோதம். கட்சி விதிப்படி, ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர் என்றும் அதில் கூறியுள்ளார்.
