June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கையில் வேலுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் – கமிஷனருடன் கடும் வாக்குவாதம்!

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
கையில் வேலுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் – கமிஷனருடன் கடும் வாக்குவாதம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

காரைக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அங்கு முருகன் வழிபாடு நடத்த அனுமதி கோரியும் இந்து முன்னணியினர் கையில் வேலுடன் வந்து கமிஷனரிடம் மனு அளித்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 2-வது போலீஸ் பீட் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற நிலம் உள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் பயன்பாடு பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி இடத்தில் வேல் பிரதிஷ்டை செய்து முருகனை வழிபட அனுமதி கோரியும் இந்து முன்னணி சார்பில் நேற்று நூதனப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலாளர் அக்னிபாலா தலைமையில், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் வேலுடன் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அவர்கள் மேயர் முத்துத்துரை மற்றும் கமிஷனர் சங்கரன் ஆகியோரைச் சந்தித்து மனு அளிக்க முற்பட்டனர். அப்போது, கமிஷனரின் அறைக்கு வெளியே காத்திருக்குமாறு அலுவலக ஊழியர்கள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர், “வெற்றிவேல்.. வீரவேல்..” என அதிரடியாகக் கோஷமிட்டனர். தங்களைச் சந்திக்கக் கமிஷனர் மறுப்பதாகக் கூறி அவர்கள் அலுவலக வளாகத்திலேயே முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தனது அறைக்கு வரவழைத்த கமிஷனர் சங்கரன், கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டார். மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களை உடனே வெளியே செல்லுமாறு கமிஷனர் கூறியதால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. “மக்களின் கோரிக்கையைக் கேட்க வேண்டிய அதிகாரி எங்களை அலட்சியப்படுத்துகிறார்” என இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர்.

சம்பவம் குறித்துப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி கமிஷனர் சங்கரன், “மாநகராட்சிக்குச் சொந்தமான பொது இடங்களைத் தனிப்பட்ட வழிபாட்டிற்கோ அல்லது மற்ற பயன்பாட்டிற்கோ சட்ட விதிமுறைகளை மீறி வழங்க முடியாது. அதே சமயம், குறிப்பிட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக அவர்கள் அளித்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்,” என்று உறுதியளித்தார்.

Tags: activismdemonstrationdispute publicpoliticstension
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விதிமீறல் குவாரியால் கண்மாய் பாசனம் அழிவு சிவகங்கையில் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கத் திரண்ட கிராம மக்கள்

Next Post

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.