திமுகவினர் நல்ல முறையில் எங்களை விமர்சனம் செய்யுங்கள் , அசிங்கமான முறையில் கேவலமான முறையில் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்ய நேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம் நாங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு நிற்க மாட்டோம் என மன்னார்குடியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி..
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள் உயர்கல்வி துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர் பள்ளியை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார் , பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் துணைவேந்தர் நியமனம் தள்ளிப் போய்க்கொண்டு உள்ளது ஏன் என்ற கேள்விக்கு ? இப்பொழுது ஒரு கட்டத்தை நெருங்கி உள்ளோம் அந்த கட்டம் என்பது நிச்சயம் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கும் பணியில் மாநில அரசு மாண்புமிகு முதலமைச்சர் மிக கவனமாக இருக்கிறார் , இது முக்கியமான விஷயம் , நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் காரணத்தினால் நண்பர்கள் உங்கள் இடத்தில் உடனே சொல்ல முடியவில்லை , அது விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ,
தொடர்ந்து திமுகவினர் காங்கிரஸ் குற்றம் சாட்டுகின்றனர் என்ற கேள்விக்கு ? அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் , அரசியல் இயக்கம் தானே இது , நாங்கள் பதுங்குவதற்க்கு தயாராக இல்லை, காங்கிரஸ் இயக்கத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறி வருகின்றனர் ,
கடந்த காலங்களைப் போல் இல்லை , திமுகவின் அடிவருடிகளாக இருக்க நாங்கள் தயாராக இல்லை , காங்கிரஸ் பேரியக்கம் நிமிர்ந்து நிற்கிறது , தமிழகத்தில் போராட்ட களத்தில் நிற்க கூட தயாராக உள்ளது , அதனால் திமுக காரர்கள் எங்களை விமர்சனம் பண்ணட்டும் , நாங்களும் அவர்களை விமர்சனம் பண்ணுவோம் , உங்களுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை , நாங்கள் வேற கூட்டணிக்கு போய்விட்டோம் ,
எங்களை நீங்கள் விமர்சனம் செய்தால் நாங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு நிற்க மாட்டோம் , நாங்களும் விமர்சனம் செய்வோம் , ஆனால் ஒன்று விமர்சனம் என்பது ஆரோக்கியமான விமர்சனமாக இருக்கவேண்டும், விமர்சனம் என்பது ஒரு வார்த்தை வெல்லும் ஒருவார்த்தை கொல்லும், திராவிட இயக்கத்தை சார்ந்த நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது நல்ல முறையில் நல்ல தமிழில் நல்ல நடைமுறையில் எங்களை விமர்சனம் செய்யுங்கள் , அசிங்கமான முறையில் கேவலமான முறையில் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்ய நேர்ந்தால் நாங்கள் விமர்சனம் செய்வோம் ஆனால் நேர்மையான முறையில் விமர்சனம் செய்வோம் என்று தெரிவித்தார்.















