நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரையிலும் 22 ஆயிரத்து 280 பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என நீடாமங்கலத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா தகவல்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது இம்முகாமை தமிழக முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் இதில் .மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் .மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா ,மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் , திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மருத்துவ நிலைய துணை அலுவலர் மற்றும் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினர். .இம்முகாமில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப் பேறு மற்றும் பெண்கள் நலன், குழந்தைகள் நலன், இருதய நோய்ப் பிரிவு, மூளை நோய்ப் பிரிவு, தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மன நல மருத்துவம் சித்தா மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்குமான பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு மருந்து- மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர். சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா பேசுகையில் திருவாரூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம்கள் என . மாவட்டத்தில் 30 முகாம்கள் நடத்துவது என நிர்ணயிக்கப்பட்டு இதுவரையிலும் 19 முகாம்கள் நடைபெற்றுள்ளது இதில் 22 ஆயிரத்து 280 பயனாளிகள் பயனைடைந்துள்ளனர்

Exit mobile version