திடீரென படுத்து தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ரவி!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதாவது, யோகாவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட யோகா தினத்தை, ஐ.நா சபை அங்கீகரித்தது. அந்த வகையில் 11-வது சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதுரையில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகாசனம் நிகழ்ச்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, யோகாசனம் செய்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, பல்வேறு யோகாசனங்களை செய்தார்.

யோகாசனங்களை மிக தெளிவாகவும், மிக எளிதாகவும் செய்து காட்டிய ஆளுநர் ரவி, இறுதியில் 51 தண்டால்களை ஒரே மூச்சில் எடுத்ததை கண்டு, அங்கிருந்தவர்கள் பிரமித்து போயினர். தனது 70 வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்து, இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து புஷ் அப்ஸ் எடுத்ததை கண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கத்தி ஆர்ப்பரித்தனர்.

Exit mobile version