சென்னையில் இன்று தங்க விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.77,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,705 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமைதான் தங்க விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960 என்ற உச்சத்தை எட்டியது. நேற்றைய விடுமுறை காரணமாக விலையில் மாற்றமில்லை. ஆனால் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்தது உள்ளிட்ட காரணங்களால் தங்க விலை தொடர்ந்து ஏற்றம் காண்கிறது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.














