ரசிகர்கள் உயிரிழப்பு : 2026 ஐபிஎலில் RCBக்கு தடையா ? முடிவெடுக்கும் பிசிசிஐ ?

பெங்களூர் :
ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியின் வெற்றிக் கொண்டாட்டம் பெரும் சோகத்தில் முடிந்தது. அந்நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் பாதிப்பாக, 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபிக்கு தடையா என்பதைச் சுற்றி பெரும் விவாதம் உருவாகியுள்ளது.

விசாரணை மற்றும் நீதிமன்ற நிலை :
சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநில போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ரசிகர்களின் உயிரிழப்பிற்கு காரணமானதாக RCB நிர்வாகம் கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

BCCI நிலைபாடு :
இந்த சம்பவம் குறித்து BCCI செயலாளர் தேவஜித் சைகியா இது “துரதிருஷ்டவசமான ஒரு சம்பவம்” என்று கூறியுள்ளார். BCCI இதுவரை எந்தவித பதவியையும் ஏற்காமல், “வெற்றிக்கொண்டாட்டம் என்பது உரிமையாளர் ஏற்பாடு” என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், RCB நிர்வாகம் நேரடியாக இதில் தொடர்புபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், BCCI கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம்.

அணிக்கு தடை ? வரலாற்றுப் பின்னணி :
BCCI ஒப்பந்தங்களில் அணிகள் பொதுவாக நடத்தவேண்டிய ஒழுங்குகள், பொது பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை மீறப்பட்டால், BCCI தண்டனை விதிக்கலாம். இதற்கு முன்பும் 2015-ம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இரு ஆண்டுகளுக்கு தடைதடைசெய்யப்பட்டிருந்தது.

Exit mobile version